Friday, 31 January 2014

ஶ்ரீ அபிராமி அந்தாதி

ஶ்ரீ அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராதநட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியி லாதஉடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரோடுகூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே                                             
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி அபிராமியே

No comments:

Post a Comment