Wednesday, 25 June 2014

ரகசியம் (secret.tv)

ரகசியம் (secret.tv)
*     வாழ்வின் மாபெரும் ரகசியம் ஈர்ப்பு விதி தான்
*     ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கம் என்று ஈர்ப்பு விதி கூறுகிறது. அதனால் நீங்கள் ஓர் எண்ணத்தை எண்ணும்போது, அதையொத்த எண்ணங்களை உங்களை நோக்கிக் கவர்ந்திழுக்கிறீர்கள்.
*     எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது. அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு. நீங்கள் எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன. அவை அதே அலைவரிசையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் காந்தமெனக் கவர்கின்றன. அனுப்பப்பட்டவை அனைத்தும் மூலத்திற்கே திரும்பி வருகின்றன. நீங்கள்தான் அம்மூலம்
*     உங்கள் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் ஒரு மனித ஒளிபரப்புக் கோபுரம் நீங்கள். உங்கள் வாழ்வில் எதையாவது மாற்ற வேண்டும் என்றால் உங்கள் எண்ணங்களை மாற்றுவதன் மூலம் அந்த அலைவரிசையை மாற்ற வேண்டும்.
*     உங்களுடைய நிகழ்கால எண்ணங்கள், உங்களது வருங்கால வாழ்வை உருவாக்குகின்றன. நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகச் சிந்திக்கிறீர்களோ அல்லது அதிகமாகக் கவனம் செலுத்திகிறீர்களோ அவை உங்களது வாழ்க்கையாக உங்கள் கண்முன் விரியும்,
*     உங்களது எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.
ü  இயற்கை விதிதான் ஈர்ப்பு விதி. புவியீர்ப்புவிசை விதியைப் போலவே இதுவும் பாரபட்சமற்றது
ü  தொடர்ச்சியான எண்ணங்கள் மூலமாக நீங்கள் அழைப்பு விடுத்தால் ஒழிய, எதுவுமே உங்கள் வாழ்க்கை அனுபவமாக ஆகாது.
ü  நீங்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய, நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். நாம் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு உடனடியாக அறிவிக்கும் சிறந்த சாதனம் நம்முடைய உணர்ச்சிகள் தான்
ü  மோசமான உணர்வுடன் இருக்கும் அதே நேரத்தில் நல்ல எண்ணங்களைச் சிந்திப்பது இயலாத காரியம்.
ü  உங்கள் எண்ணங்கள் உங்களது அலைவரிசையைத் தீர்மானிக்கும். உங்களது உணர்வுகள் நீங்கள் எந்த அலைவரிசையில் இருக்கிறீர்கள் என்பதை உடனடியாக உங்களுக்கு எடுத்துரைக்கும். நீங்கள் மோசமான உணர்வுடன் இருக்கும்போது, மேலும் மோசமான விஷயங்களைக் கவர்ந்திழுக்கும் அலைவரிசையில் இருக்கிறீர்கள். நல்ல உணர்வு நிலையில் இருக்கும்போது மேலும் நல்ல விஷயங்களைச் சக்தியுடன் கவர்ந்திழுக்கிறீர்கள்.
ü  இனிய நினைவுகள், இயற்கை அல்லது உங்கள் உள்ளம் கவர்ந்த இசை போன்ற இரகசிய மனமாற்றிகள் நொடிப்பொழுதில் உங்கள் உணர்வுகளை மாற்றி உங்கள் அலைவரிசையில் மாற்றம் ஏற்படுத்த வல்லவை.
ü  அன்பு உணர்வுதான் நீங்கள் வெளிப்படுத்துவதிலேயே மிகவும் உயர்ந்த அலைவரிசை, எவ்வளவு அதிகமான அன்பை வெளிப்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான சக்தியை நீங்கள் உற்பத்தி செய்வீர்கள்.
ü  அலாவுதீனின் பூதத்தைப்போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்
ü  நீங்கள் விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க, படைப்பியக்கச் செயல்முறை உங்களுக்கு உதவும். அவை கேளுங்கள், நம்புங்கள் மற்றும் பெறுங்கள் ஆகியவை (ASK, BELIEVE & RECEIVE)
ü  உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, உங்கள் விருப்பம் குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.
ü  நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிப்பரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.
ü  உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மன உணர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பது உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.
ü  உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுபூர்வமாக உணருங்கள். அது உங்களை நோக்கித் தானாகவே ஓடிவரும்.
ü  நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்கும்போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளது எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதும்.
ü  ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விஷயங்களில் துவங்குவது, ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி, ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்க்க் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விஷயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.
ü  நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.
·        எதிர்பார்ப்பு ஓர் ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தி. உங்களுக்கு வேண்டியதை மட்டும் எதிர்பாருங்கள் வேண்டாதவற்றைத் தவிர்த்து விடுங்கள்
·        உங்களுடைய சக்தியைச் சரியான முறையில் இடம்பெயரச் செய்து, நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்குச் சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.
·        நீங்கள் வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.
·        உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும். அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.
·        ஈர்ப்பு விதியை உங்களுக்குச் சாதகமான உபயோகப்படுத்திக் கொள்ள அதை ஒருமுறை நிகழ்வாக ஆக்காமல் அதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்
·        ஒரு நாளின் இறுதியில், தூங்கப்போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள். ஏதாவது ஒரு நிகழ்வோ அல்லது தருணமோ நீங்கள் விரும்பியபடி அமையவில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிகழ வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடைபெற்றது போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.
·        பணத்தை கவர வேண்டுமா செல்வத்தின்மீது கவனத்தை குவியுங்கள். பணத்தின் பற்றாக்குறை மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதிகப் பணத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவருவது இயலாத காரியமாகிவிடும்.
·        உங்களுக்குத் தேவைப்படும் பணம் உங்களிடம் ஏற்கனவே இருப்பது போன்று பாவனை செய்வதும், கற்பனை செய்து கொள்வதும் அதைப் பெற உதவும். செல்வம் இருப்பது போன்ற விளையாட்டில் ஈடுபடுங்கள். பணம் குறித்த உங்களது மனநிலை மேம்படும். அந்த மனநிலை இன்னும் சிறப்பானவை உங்கள் வாழ்க்கையை நோக்கிப் பாய வழி வகுக்கும்.
·        தற்போது மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வு உங்கள் வாழ்வில் இன்னும் அதிகமான பணத்தை விரைவாகக் கொண்டுவரச் சிறந்த வழி.
·        நீங்கள் விரும்பும் அனைத்தையும் நோக்கி உங்களுக்குள், இது எனக்குக் கட்டுப்படியாகும். அதை என்னால் வாங்க முடியும் என்று கூறிக்கொள்வதை ஒரு நோக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். அது உங்களது எண்ணங்களை மாற்றி, பணம் குறித்த உங்களது மனநிலை மேம்பட உதவும்
·        உங்கள் வாழ்வில் மேலும் பணத்தைக் கொண்டுவர வேண்டுமெனில் அதைப் பிறருக்குக் கொடுங்கள். நீங்கள் பணம் குறித்துப் பெருந்தன்மையாக இருந்து அதை பிறருடன் மனமகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும்போது என்னிடம் ஏராளமான பணம் இருக்கிறது என்று தெரிவிக்கிறீர்கள்.
·        உங்களது அஞ்சலில் / மின்னஞ்சலில் கிப்ட் வவுச்சர்கள் காசோலைகள் வருவதாக அகக்காட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள்.
·        செல்வம் ஒரு பக்கமும், தரித்திரம் ஒரு பக்கமும் இருக்கும் தராசில், செல்வத்தின் பக்கம் உங்கள் எண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். செல்வ செழிப்பு பற்றியே சிந்தியுங்கள்
·        உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
·        உங்களுடைய முதற்கவனமும் முழுக்கவனமும் உங்கள் மீதே இருக்கட்டும். உங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளாவிடில் மற்றவர்களுக்குக் கொடுக்க உங்களிடம் எதுவும் இருக்காது.
·        உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.
·        நீங்கள் உங்களைப்பற்றி மோசமாக உணரும்போது, அன்பைத் தடுக்கிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
·        உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளை ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டும்.
·        ஓர் உறவு சரியாகச் செயல்பட வேண்டும் என்றால், அடுத்தவரிடம் நீங்கள் மெச்சும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடைய குற்றங்குறைகள் மீது அல்ல. அவர்களிடம் உள்ள வலுவான அம்சங்களில் கவனம் செலுத்தினால் அவற்றை மேலும் அதிகமாக நீங்கள் பெறுவீர்கள்
·        ஈர்ப்பு விதியின் நடைமுறைச் செயல்பாட்டின் நிருபணம்தான் பிளேஸ்போ விளைவு. ஒரு நோயாளி, ஒரு மாத்திரை தன்னைக் குணப்படுத்தும் என்று நம்பினால், தான் நம்புவதைப் பெறுகிறார் குணமாகிறார்.
·        வெளியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. ஆரோக்கியத்தின் மீது முழுக் கவனம் செலுத்துவதை நாம் ஒவ்வொருவரும் நம்முள் செய்து கொள்ளலாம்.
·        சிரிப்பு, மகிழ்ச்சியைக் கவர்ந்திழுக்கிறது. எதிர்மறை விஷயங்களை வெளியேற்றுகிறது. அதிசயமான குணமாதல்களுக்கு வழி வகுக்கிறது.
·        எண்ணங்கள் மூலமும், வியாதிகளை கவனித்து அதற்குக் கவனம் அளிப்பதன் மூலமும், நாம் நம் உடலில் வியாதிகள் நிலைதிருக்க வழி வகுக்கிறோம் உங்களுக்கு எப்போதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அது குறித்துப் பேசாதீர்கள். அவ்வியாதி மேலும் பெருக பேசுவதைக் கவனிக்கும் போது நீங்கள் அதற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள். மாறாக உரையாடலை நல்ல விஷயத்திற்குத் திருப்புங்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உங்கள் மனத்தில் உருவகப்படுத்தி அந்தச் சக்திமிக்க எண்ணங்களைப் பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்.
·        வயதால் குறித்த சில நம்பிக்கைகள் நம் மனத்தில் ஆழப் பதிந்துள்ளன. அவற்றை உங்களது மனத்திலிருந்து வெளியேற்றிவிட வேண்டும். ஆரோக்கியம் மற்றும் மாறாத இளமை குறித்து கவனம் செலுத்துங்கள்
·        வயதாதல் மற்றும் வியாதி குறித்துச் சமுதாயம் கொண்டிருக்கும் கருத்துகளுக்குச் செவி சாய்க்காதீர்கள். எதிர்மறையான எண்ணங்களால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது
·        எதிர்ப்பது வலுக்கு. ஏனெனில் நீங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் அதில் கவனம் செலுத்துவீர்கள். எதை மாற்ற வேண்டுமானாலம் நீங்கள் உங்களுடைய உள்முகமாக அணுகி உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலமாகப் புதிய சமிக்கையை வெளிப்படுத்துங்கள்.
·        எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உலகிற்கு உங்களால் எவ்விதத்திலும் உதவி செய்ய முடியாது. உலகின் எதிர்மறை நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் போது நீங்கள் அதற்கு மேலும் சக்தியளிப்பதோடு, உங்களுடைய வாழ்வினுள்ளும் எதிர்மறையான விஷயங்களைக் கொண்டு வருகிறீர்கள்.
·        உலகின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக உங்களது ஆற்றலையும் கவனத்தையும், நம்பிக்கை அன்பு, அபரிமிதம், கல்வி மற்றும் அமைதி ஆகியவற்றிற்கு அளியுங்கள்.
·        நல்ல விஷயங்கள் ஒருபோதும் தீர்ந்து போகாது ஏனெனில் எல்லோருக்கும் போக உபரியாகவும் ஏராளம் உள்ளது. வாழ்க்கை அபரிமிதமாக இருத்தல் வேண்டும்.
·        உங்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலமாக எல்லையற்ற மூலத்தை அணுகக் கூடிய திறனும், அதை உங்களது அனுபவமாக மாற்றிக் கொள்ளும் சக்தியும் உங்களிடம் இருக்கிறது.
·        உலகிலுள்ள சகலத்தையும் ஆராதனை செய்யுங்கள். ஆசிர்வதியுங்கள். அப்படி செய்யும்போது எதிர்மறை விஷயங்களையும் பிணக்குகளையும் கரைத்துவிடுவீர்கள். மிக உயர்ந்த அலைவரிசையான அன்பின் அலைவரிசையோடு உங்களை இசைவாகப் பொருத்திக்கொள்வீர்கள்.
·        அனைத்துமே ஆற்றல்தான். நீங்கள் ஆற்றலால் ஆன காந்தம். அதனால் நீங்கள் எல்லாவற்றையும் மின்காந்த ஆற்றலாக உங்களை நோக்கி இழுக்கிறீர்கள். நீங்கள் வேண்டுபவற்றை நோக்கி உங்களையும் மின் காந்த ஆற்றலாக மாற்றிக் கொள்கிறீர்கள்.
·        நீங்கள் ஓர் ஆன்மா. ஓர் ஆற்றல். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது தன் வடிவத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும். அதனால் உங்களது பரிசத்தமான சாராம்சம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. எப்பொழுதும் அப்படியே இருந்து வரும்.
·        பிரபஞ்சமானது எண்ணித்திலிருந்து பிறக்கிறது. நாம் சிருஷ்டி கர்த்தாக்கள். நாம் நமது தலைவிதியை மட்டும் நிர்ணயிப்பதில்லை. பிரபஞ்சத்தின் தலைவிதியையும் சேர்த்து நிர்ணயிக்கிறோம்.
·        கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புதுக் கருத்துக்களும் புதிய யோசனைகளும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அறிவும், அனைத்து கண்டுபிடிப்புகளும் பிரபஞ்ச மனத்தில் சாத்தியக் கூறுகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன. மனித மனம் அதிலிருந்து எடுத்துக் கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அனைத்தையும் உங்களது அக உணர்வு நிலையில் அடக்கி வைத்திருக்கிறீர்கள்.
·        நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர்கள். நாம் அனைவரும் ஒன்றே.
·        உங்களது கடந்தகாலக் கஷ்டங்கள், கலாச்சாரக் குறியீடுகள், சமுதாய நம்பிக்கைகள் ஆகியவற்றின் பிடியிலிருந்து மீளுங்கள். உங்களுக்குத் தகுதியென்று கருதும் வாழ்க்கையை உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளும் வல்லமை உங்களுக்கு மட்டும் தான் உள்ளது.
·        உங்களது அபிலாஷைகளை நிஜமாக்க ஒரு சுருக்கு வழி உள்ளது. அது நீங்கள் என்ன வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை மூல உண்மையாகப் பார்ப்பது.
·        உங்களது சக்தி உங்களது எண்ணத்தில்தான் உள்ளது. அதனால் விழிப்புடன் இருங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.


நன்றி thesecret.tv

Monday, 23 June 2014

தமிழரின் வரலாறு



தமிழரின் வரலாறு 

உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம்
கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன் : நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000 : இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000 : முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000 : யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000 : நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000 : கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000 : தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 – 35000 : தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 – 20000 : ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 – 10000 : ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527 : முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 – 6100 : பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000 : கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087 : கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 – 3000 : கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000 : உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000 : சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு – 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு – 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு – 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு – 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 – 3000 : ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு – 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு – 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 – 1000 : காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு – 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. – 1900 : வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500 : முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. – 1450 : உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. – 1316 : மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200 : ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925 : யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின் : இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776 : கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி. மு. 750 : பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700 : சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543 : கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600 : லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600 : கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று,
கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 – 527 : மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560 : பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478 : கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500 : கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478 : இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450 : ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 – 348 : சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400 : கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 – 328 : உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 – 270 : மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326 : அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305 : சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302 : சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300 : சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300 : கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232 : மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245 : சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251 : புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220 : சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221 : புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 – 200 : கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180 : குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200 : முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200 : தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87 : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62 : செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42 : யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25 : பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31 : உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9 : இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1 : கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.