Saturday, 1 August 2015

பொன்மொழிகள்....!

* ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.
விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
* வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,
தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
* பணம் என்ற ஒன்று நுழையாத வரை எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
* மனிதனின் அத்தனை கோர முகங்களையும் அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
* குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
* நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,
நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
* அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
* பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,
பகுத்தறிவையும் இழக்கத் தயாராகி விடுகிறோம்.
* நம்பிக்கையின் கை உடையும்போது சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
* இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம். வலிய ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றம்,சுமை.

 நன்றி Live Life Happy
 

No comments:

Post a Comment