Tuesday, 29 September 2020

ஆயில் சருமத்திற்கு நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்தை மீண்டும் மீண்டும் கழுவுவதால் உங்கள் சருமம் எண்ணெய் குறைவாக இருப்பதை எளிதாக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் தேவையை உணரும்போது மட்டுமே அதைக் கழுவவும், அதனுடன் நீங்கள் அதிகமாக முகம் கழுவும்போது, அது உங்கள் சருமத்தை மேலும் சேதப்படுத்தும்.

உங்கள் முகத்தை ஈரப்பதமாக்காதது உங்கள் எண்ணெய் சருமத்திற்கு உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். மாய்ஸ்சரைசரைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எண்ணெய் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹைட்ரேட்டரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். லேசான நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தை அதிகமாக உலர்த்துவதைத் தடுக்க நன்றாக வேலை செய்கிறது.

பல மேக்கப் தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்துவது அல்லது கனமான கிரீம் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் துளைகளை அதிகமாக அடைத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். அதே மூலப்பொருளைக் கொண்டு உங்கள் முகம் கழுவும் அல்லது டோனரில் ஒரு சாலிசிலிக் அமிலத்தைப் பயன்படுத்துங்கள். இது எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. திறந்த துளைகளுடன் நீங்கள் மிகவும் எண்ணெய் சருமம் இருந்தால், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுவதால் அடாபலீன் அல்லது அசெலிக் அமிலம் கொண்ட ஒரு நைட் கிரீம் பயன்படுத்தலாம்.

உங்கள் உடலில் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கு காரணமான ஹார்மோன்கள் கர்ப்பம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பருவமடையும் போது கூட மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். மன அழுத்தம் இந்த நிலைகளை அதிகரிக்கும் மற்றும் கார்டிசோலுடன் இணைந்தால், அது சரும உற்பத்தியை ஏற்படுத்தும். இது வியர்வை அதிகரிக்க காரணமாகிறது மற்றும் இரத்த ஓட்டம் தோலை விட்டு வெளியேறி உள் உறுப்புகள் மற்றும் மூளைக்குச் செல்வதால் செயல்பாடு குறைகிறது. இது இறுதியில் அதிக சருமத்தில் எண்ணெய் பசையை அதிகமாக்குகிறது.

Monday, 28 September 2020

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...!

1. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது, என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று என்று உங்களை நீங்களே தாழ்வு படுத்தாதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை உலகில் எவருக்கும் அமைந்ததில்லை. மனித வாழ்க்கையே போராட்டங்கள் நிறைந்தது தான்.

2. எந்த மொழி உங்களால் சரளமாகப் பேச முடியுமோ அந்த மொழியில் பேசுங்கள், அரைகுறையாக பேச தெரிந்த மொழியை உபயோகிக்கும்போது சில தடுமாற்றங்கள், உளறல்கள் உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். 

3.  சிலருக்கு பேச்சாற்றலால் தான் சொல்ல வந்த விஷயத்தை ஒருவருக்கு புரிய வைக்க முடியும், பலருக்கு  பேச்சாற்றல் இருக்காது ஆனால் எழுத்துமூலமாகத் தான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள். உங்கள் திறமை எது என்று புரிந்து அதன்படி செயல்படுங்கள், பெரும்பாலும் பேச்சைக் காட்டிலும் எழுத்து மிகவும் வலு வாய்ந்தது, 

3.  ஒரு விசயத்தைக் கற்றுக் கொள்ள சிலருக்குப் படித்தால் புரிந்து விடும், சிலருக்கு அனுபவப்பூர்வமாக பார்த்தால் புரியும், சிலருக்கு யாராவது அதை எடுத்துச் சொன்னால் புரியும், உங்களுக்கு எது பிடிக்கும் என்பதை தேர்ந்தெடுத்து அதன்படி செய்யுங்கள், குறிப்பாக மாணவர்களுக்கு இது பொருந்தும்.

4. மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் அழகு தான், முதலில் உங்களை நீங்களே ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த உடை அணிந்தால் தன்னம்பிக்கையாக உணர்வீர்களோ அந்த மாதிரி உடை அணியுங்கள்.

5. எதிரே இருப்பவர்கள் அறிவாளிகள் அவர்களுக்கு எல்லாம் தெரியும் நமக்கு ஒன்றுமே தெரியாதே என்று ஒருபோதும் நினைக்காதீர்கள், உங்களுக்குத் தெரிந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

6. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை செயல்படுத்துங்கள், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை யோசிக்காதீர்கள், சில உன்னதமான கண்டுபிடிப்புகள் முதலில் அபத்தமாக மக்கள் நினைத்து எள்ளிநகையாடியது தான், பின்னாளில் பெரிய கண்டுபிடிப்பாக மாறியது.

7. சிரிக்கும் போது அனைவரும்  சிரிப்பார்கள், அழும்போது எவரும் உங்களுடன் அழுவதில்லை, எனவே சந்தோசமான விஷயங்களை அனைவரிடமும் பகிருங்கள், சோகமான நிகழ்வுகள், தோல்விகள், மனதிலுள்ள குறைகளை உங்களின் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும் தெரிவித்து ஆலோசனை பெறுங்கள்.

8. நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள், உங்களை ஒதுக்கி வைக்கிறார்கள், உங்களை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுகிறார்களோ என்று எப்பொழுதும் நினைக்காதீர்கள், ஒரு விஷயத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நல்ல விஷயங்கள் கூட தவறாகவே தோன்றும்.

9. சிறிய ஒரு விஷத்தை கற்பனை செய்து பெரிய விசயமாக பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்காதீர்கள்,  பிரச்சனைகளைக் கண்டு ஓடாதீர்கள் அப்படி ஓடினால் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.  நீங்கள் எதிர்த்து நின்றால் அனைத்துப் பிரச்சனைகளும் முடிவிற்கு வந்து விடும்.

10.  உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க முடியும், உங்கள் பிரச்சனைகளை அடுத்தவர்கள் தீர்ப்பார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்

Tuesday, 15 September 2020

மூளை_முதல்_மலக்குடல்_வரை

#மூளை_முதல்_மலக்குடல்_வரை... 🌝 🚶‍♂ 
உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்

🌝 மூளை .கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.ஷ...ரு🌳 

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀#கண்கள் பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁#பற்கள் 🌝மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁#நரம்புகள் .சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹#ரத்தம் வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

💃#சருமம்🚶‍♂தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓நுரையீரல் & இதயம் 🌺🌸 

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🚶‍♂வயிறு காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த #சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

🍊வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்

🍅கல்லீரல் & மண்ணீரல் . கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🚶‍♂மலக்குடல் அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣#பாதம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

#உணவே_மருந்து_ஆரோக்கியமே அறுசுவை ...மகிழ்ச்சியுடன் வாழ பழகு.