Tuesday, 29 July 2025

50- வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனிக்கவும்

*50- வயதுக்கு மேற்பட்டவர்கள்                 கவனிக்கவும்* *குறிப்பாக 55 வயதிற்கு மேலே உள்ள நமது குரூப்பில் உள்ள  அனைவரும் கட்டாயம் இந்த குறிப்புகளை தயவுசெய்து படித்து பின்பற்றவும்* 
 ******************
 நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
  ::::::::::::::::::::::::::::::::::
 உங்கள் தேநீரில் *பால்* குறைவாக குடிக்கவும். அதற்கு பதிலாக, *எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு* சேர்க்கவும்.
 ~~~~~~~~~~~~~~~
 பகல் நேரத்தில், *அதிக தண்ணீர்* குடிக்கவும்; இரவு நேரத்தில், *குறைவாக* குடிக்கவும்.
 ~~~~~~~~~~~~~~~
 பகலில் *2 கப் காபிக்கு* மேல் குடிக்க வேண்டாம் அல்லது முற்றிலும் *நிறுத்தவும்* என அறிவுறுத்தப்படுகிறது.
 ~~~~~~~~~~~~~~~
 *எண்ணெய் உணவுகளை குறைவாக உண்ணுங்கள்* .
 ~~~~~~~~~~~~~~~
 சிறந்த தூக்க நேரங்கள் *இரவு 10 மணி முதல் காலை 6* மணி வரை.
 ~~~~~~~~~~~~~~~
 மாலையில், *மாலை 5 அல்லது 6 மணிக்குப் பிறகு ஏதாவது சிறிது சாப்பிடுங்கள்.* 
 ~~~~~~~~~~~~~
 *குளிர்ந்த நீரில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்* . படுக்கைக்குச் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உங்கள் *மருந்துகளை* எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளை உட்கொண்டு உடனடியாக *படுத்துக்கொள்ளாதீர்கள்* .
 ~~~~~~~~~~~~~~~
 நீங்கள் மேலும்  ​​​​ *குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதை நிறுத்துங்கள்* ஆனால் *அறை வெப்பநிலையில் தண்ணீரை மட்டுமே* குடிக்கவும்
 ~~~~~~~~~~~~~~~
 ஒரு நாளைக்கு *குறைந்தது 8 மணிநேரம் தூங்க* முயற்சி செய்யுங்கள்.
 ~~~~~~~~~~~~~~~
 முடிந்தால் மதியம் முதல்  *மாலை 3 மணி வரை அரை மணி* நேரம் தூங்குவது, *மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும்* , எளிதில் வயதாகாமல் இருக்கும்.
 ~~~~~~~~~~~~~~~
 உங்கள் மொபைல் ஃபோன் *பேட்டரியில் குறைவான சார்ஜில்* அழைப்புகளை செய்ய வேண்டாம், ஏனென்றால் ஆபத்தான கதிர்வீச்சு மற்றும் அலைகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை விட *பல மடங்கு* அதிகமாக இருக்கும்.
 ~~~~~~~~~~~~~~~
 *செல் போன் பேச  பதிலளிக்க* உங்கள் இடது காதைப் பயன்படுத்தவும், வலது காது உங்கள் *மூளையை நேரடியாகப் பாதிக்கும்* .  அழைப்புகளுக்குப் பதிலளிக்க  *ஒயருடன் கூடிய இயர்போன்களைப்* பயன்படுத்துவது இன்னும் சிறந்தது, *புளூ டூத் இயர்ஃபோன்களை கட்டாயம் தவிர்க்க.* 
 ~~~~~~~~~~~~~~~
 உங்களால் முடிந்தவரை அடிக்கடி சரிபார்க்க வேண்டிய இரண்டு விஷயங்கள்:
 (1) உங்கள் *இரத்த அழுத்தம்* 
 (2) உங்கள் *இரத்த சர்க்கரை.* 
(3)தேவை ஏற்படின் *யூரியா கிரியாட்டினின்* அளவு ~~~~~~~~~~~~~~~
 *உங்கள் உணவுகளில் குறைந்தபட்சமாக* குறைக்க வேண்டிய ஆறு விஷயங்கள்:
 (1) *உப்பு* 
 (2) *சர்க்கரை* 
 (3) பாதுகாக்கப்பட்ட இறைச்சி மற்றும் உணவுகள்
 (4) *குறிப்பாக வறுத்த சிவப்பு இறைச்சி* 
 (5) பால் பொருட்கள்
 (6) மாவுச்சத்துள்ள பொருட்கள்
 ~~~~~~~~~~~~~~~
 உங்கள் உணவில் அதிகரிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்:
 (1) *கீரைகள்/* காய்கறிகள்
 (2) *பீன்ஸ்* 
 (3) *பழங்கள்* 
 (4)கொட்டைகள்
 ~~~~~~~~~~~~~~~
 நீங்கள் மறக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்:
 (1) *உங்கள் வயது* 
 (2) *உங்கள் கடந்த காலம்* 
 (3) *உங்கள் கவலைகள்/குறைகள்* 
(4) *மது புகை மாது சூது (5)அடுத்தவர்களை பார்த்து இலக்கு நிர்ணயிப்பது ~~~~~~*~~~~~~~~~
 நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு வலிமையாக இருந்தாலும் உங்களிடம் இருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்:
 (1) *உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்* 
 (2) *அக்கறையுள்ள குடும்பம்*
 (3) *நேர்மறை எண்ணங்கள்* ~~~~~~~~~~~~~~~
 ஆரோக்கியமாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள்:
 (1) *பாடுதல்* 
 (2) *நடனம்* 
 (3) *உண்ணாவிரதம்* 
 (4) *புன்னகை/சிரித்தல்* 
 (5) *மலையேற்றம்/உடற்பயிற்சி* 
 
 (6) *உங்கள் எடையைக் குறைக்கவும்.* 
 ~~~~~~~~~~~~~~~
 நீங்கள் *காத்திருக்க கூடாத* ஐந்து விஷயங்கள்:
 (1) *நீங்கள் சாப்பிட பசி எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்* 
 (2) *நீங்கள் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்* 
 (3) *நீங்கள் தூங்குவதற்கு தூக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டாம்* 
 (4) *நீங்கள் ஓய்வெடுக்க சோர்வாக உணரும் வரை காத்திருக்க வேண்டாம்* 
 (5) *மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்ல உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை* காத்திருக்காதீர்கள், இல்லையெனில் *வாழ்க்கையில் நீங்கள் வருத்தப்படுவீர்கள்* .
~~~~~~~~~~~~~~~
 இந்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் படித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று:
 (1) இதை உங்கள் *அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுக்கு தயவுசெய்து கட்டாயம் பகிருங்கள்,* நீங்கள் அவ்வாறு செய்யும்போது, ​​ உங்களுடைய *சமுதாயம் ஆரோக்கியமான புரிதலுடன் கூடிய வாழ்க்கை அமையும்.* 
 =================
  உங்களின் இயல்பான *பணிகளை,வியாபாரத்தை* மேற்கொள்ளும் போது, ​​நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதை அறிய, எப்பொழுதும் உங்கள் உடலைச் சரிபார்த்துக்கொள்ள மறக்காதீர்கள்,
 
 மருத்துவ தகுதிகள்:
 
            உயர் இரத்த அழுத்தம்
           ----------
 *120/80 -- இயல்பானது*
 *130/85 --இயல்பான (கட்டுப்பாடு)* 
 *140/90 -- உயர்* 
 *150/95 -- மிக அதிகம்* 
 ----------------------------
 
            *பல்ஸ்* 
           ----------
 நிமிடத்திற்கு 72 (தரநிலை)
 60 --- 80 p.m. (சாதாரண)
 *40 -- 180 p.m.(அசாதாரண)* 
 ----------------------------
 
           *உடல் வெப்ப நிலை* 
           -------------------
 98.4 F (சாதாரண)
 *99.0 F மேலே (* காய்ச்சல்)
 
 உங்கள் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்....
 
  *மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படாமல் இருக்க இரவில் இரத்தம் உறைவதைத் தவிர்க்க நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது* ஒரு கிளாஸ் *வெதுவெதுப்பான* நீரைக் குடிக்கவும்.

Saturday, 19 July 2025

பரிகாரங்கள்

*நட்சத்திர* பரிகாரங்கள்.!!!🙏✍️
""""""""""""""""""""""""""""""""""""""""""'
 *அஸ்வினி* நட்சத்திரக்காரர்கள் எமகண்ட காலத்தில் அவ்வப்போது குதிரைகளுக்கு கொள்ளு மற்றும் இராசாளி பறவைகளுக்கு தானிய வகைகள் வழங்கி வரும் பொழுது தங்களின் சகலவித அனைத்து தோஷங்களும் நீங்கும்.

 *பரணி* நட்சத்திரக்காரர்கள் யானைக்கும் யானை பாகனுக்கு உணவு தானம் வழங்குவதும், காகத்திற்கு அன்னம் அளிப்பதும், வீட்டில் நெல்லி மரம் வளர்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யும். 

 *கிருத்திகை* நட்சத்திரக்காரர்கள் ஆட்டுக்கறி உண்பதை தவிர்த்து, அத்தி மரம் வளர்த்து, மயில்களுக்கு இரைஅளித்து வர தங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் நிவர்த்தி பெற்று வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடலாம். மேலும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவாக இருந்து செயல்படுங்கள்.

 *ரோகிணி* நட்சத்திரக்காரர்கள் நாகத்தை வணங்கி புற்றுக்கு பால் ஊற்றுவதும், நாவல் மரத்திற்கு நீர் விடுவதும், நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்கு செல்வதும், வீட்டில் ஆந்தை படம் ஒன்றை வாங்கி வைத்து அதனை தினசரி பார்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெற்று இன்புறலாம். 

 *மிருகசீரிடம்* நட்சத்திரக்காரர்கள் புற்றுக்கு பால் வார்ப்பது, கோழி மற்றும் சேவலுக்கு இரை போடுவதும், பிராமணர்கள், குழந்தைகள், சன்னியாசிகளுக்கு ஆடை மற்றும் உணவு தானம் அளிப்பதும் நல்ல பலன் தரும். மேலும் கோழி இறைச்சி தவிர்ப்பதும், உலக்கையால் உரலை இடிக்காமல் இருப்பதும் அவசியம். 

 *திருவாதிரை* நட்சத்திரக்காரர்கள் பாம்புகளுக்கு பால் கொடுப்பதும், நாய்களுக்கு துரோகம் இழைக்காமல் இருப்பதும், புற்று மாரியம்மனை வணங்குவதும், ஆடலரசன் சிவபெருமான் உள்ள திருத் தலங்களான மதுரை சிதம்பரம் குற்றாலம் திருநெல்வேலி உள்ளிட்ட திருத்தலங்களுக்குச் சென்று வருவது தங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி நன்மையை ஏற்படுத்தும், 

 *புனர்பூசம்* நட்சத்திரக்காரர்கள் பூனைக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், மூங்கில் மரங்களை நட்டு வளர்ப்பது, மூங்கில் மரங்களை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்களுக்கு செல்வதும், அன்னப்பறவை யுடன் கூடிய சரஸ்வதி தாயாரை வணங்குவதும், ஆட்டு இறைச்சி தவிர்ப்பதும், தங்களுக்கு ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். 

 *பூசம்* நட்சத்திரக்காரர்கள் தனது நட்சத்திர விலங்கான ஆடுகளை வளர்ப்பதும், ஆடுகளை உணவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும், அரச மர விநாயகரை 108 முறை வலம் வருவதும், ((நீர்காகம்)) காகத்திற்கு அன்னம் படைப்பதும், திருச்செந்தூர் முருகனை வழிபடவும் தங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் 

 *ஆயில்யம்* நட்சத்திரக்காரர்கள் பூனைக்கு தீங்கு விளைவிக்காமல்ம், புன்னை மரத்தை நட்பு வளர்ப்பதும், கிச்சிலி போன்ற பறவைகளுக்கு உணவளிப்பதும், புற்றுகளுக்கு பால் வார்ப்பதும், திங்கட்கிழமை ஆயில்யம் நட்சத்திரம் கூடிய நாளில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்வதாலும் சகல தோஷங்களும் நிவர்த்தி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.

 *மகம்* நட்சத்திரக்காரர்கள் ஆலமர விநாயகரை வணங்குவதும், கருட பகவானையும் கருட தரிசனம் செய்வதும், எமதர்மராஜாவிற்கு சிறப்பு அர்ச்சனை செய்வதும், பித்ரு தேவதைகளான முன்னோர்களை வணங்குவதும், தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதும், இரண்டு மற்றும் நான்கு கால் பிராணிகளை வளர்ப்பதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து வித தோஷங்களையும் நிவர்த்தி செய்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும், 

 *பூரம்* நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கும் விநாயகர் வாகனத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்வதும், கருடனை வணங்குவது, ஸ்ரீரங்கம் கருடபகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்வதும், பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவிலுக்கு செல்வதும், வருடம் ஒருமுறை காஞ்சி காமாட்சி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரையும் தரிசனம் செய்துவர தங்கள் ஜாதகத்தில் ஏற்படும் அனைத்து தடைகளும் நிவர்த்தி பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.  

 *உத்திரம்* நட்சத்திரக்காரர்கள் பொதுவாக பசு மாடுகளுக்கு அகத்திகீரை வெல்லம் பச்சரிசி போன்ற உணவளிப்பதும், அலரி அல்லது இலந்தை மரத்திற்கு நீர் ஊற்றுவது, இந்த நட்சத்திரத்தில் பிறந்த மகாலட்சுமி தாயாரையும் தேவகுரு பிரகஸ்பதியையும் வணங்குவதும், ஸ்ரீரங்கத்தில் உள்ள லக்ஷ்மி அம்சமாக இருக்கும் வில்வ மரத்தை வலம் வந்து வணங்கலாம்.மேலும் உத்திரமும் வெள்ளிக்கிழமையும் சேரும் நாளில் வீட்டில் அஷ்ட லக்ஷ்மி பூஜை செய்வதில் நல்ல முன்னேற்றத்தை தரும். 

 *அஸ்தம்* நட்சத்திரக்காரர்கள் பருந்து பறவை விருந்து வைப்பதும், பெண் எருமைக்கு உணவளிப்பதும், திருப்பைஞ்சீலி சென்று எமதர்மராஜா வணங்குவதும், தினசரி சூரிய பகவானை வணங்குவது உடன் காயத்ரி தேவியின் காயத்ரி மந்திரம் சொல்லுவதும், அத்தி மரம் வளர நீர் ஊட்டுவதும், சூரிய பகவான் மனைவி மக்கள் என குடும்பத்துடன் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வணங்குவதும் தங்கள் வாழ்வில் எல்லையற்ற இன்பத்தைப் பெற்று தரும்... 

 *சித்திரை* நட்சத்திரக்காரர்கள் புலியுடன் கூடிய ஐயப்பனை வணங்குவது,, வில்வமரம் தலவிருட்சங்கள் செல்வதும் வில்வ மரம் நட்டு வளர்ப்பது, மரங்கொத்திப் பறவைக்கு உணவளிப்பதும்,, தேவதச்சன் விஸ்வகர்மா ஆலயம் செல்வது,ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வாரை வணங்கி 16 நெய்தீபம் ஏற்றுவதும்,ஆண்டுக்கொருமுறை சுதர்சன ஹோமம் செய்வதால் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களும் நீங்கி சக்கரத்தாழ்வாரின் 16 ஆயுதங்கள் உதவியுடன் 16 செல்வங்களுடன் வாழலாம். 

 *சுவாதி* நட்சத்திரக்காரர்கள் எருமைக்கு உணவளிப்பதும், மருத மரத்திற்கு நீர் ஊற்றுவதும், தேனீ கூடுகளை பராமரிப்பதும், தினசரி தேன்கூடு படத்தைப் பார்த்து வருவதும், மருதமலை முருகனை தரிசிப்பதும், தனது காலடியின் கீழ் எருமை மாட்டுடன் இருக்கும் காளிதேவியை வணங்குவதும், செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரத்துடன் கூடிய ராகுகாலத்தில் நரசிம்ம பெருமாளை வணங்குவது தங்களுக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம். 

 *விசாகம்* நட்சத்திரக்காரர்கள் விளாம் மரம் நட்டு வளர்ப்பதும், செங்குருவி போன்ற பறவைகளுக்கு உணவளிப்பது, புலி மேல் அமர்ந்த ஐயப்பனை வணங்குவதும், மதுரைக்கு அருகே உள்ள திருமோகூர் கஜேந்திர வைபவம், காஞ்சிபுரம் கருட சேவை தரிசனம் செய்வதும், திருச்செந்தூர் கடற்கரையில் சந்தன மலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் தோஷங்களும் நீங்கி நல்வாழ்வு பெறலாம். 

 *அனுஷம்* நட்சத்திரக்காரர்கள் மான் பொம்மை அல்லது படம் வீட்டில் வைப்பதும், மகிழ மரம் நட்டு வளர்ப்பது, வானம்பாடி பறவைக்கு உணவு வைப்பதும், லட்சுமி நாராயணனை வணங்குவதும், திருநறையூர் உள்ள நாச்சியார்கோவில் சென்று பெருமாளுக்கு உடைய கல் கருடவாகன சேவையை தரிசனம் செய்வதும், பிராமணர்களுக்கு நல்லெண்ணை தானம் செய்வதும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். 

 *கேட்டை* நட்சத்திரக்காரர்கள் மான்கள் படத்தை அவ்வப்போது பார்த்து வருவதும், திருச்சி அருகே திருப்பராய்த்துறை சென்று சிவபெருமானை வழங்குவதும், திருவிடந்தை ஊரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வராக பெருமாளையும், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஸ்ரீ பூவராக பெருமானையும் வணங்கிவர தடைப்பட்ட அனைத்து சுப காரியங்களும் இனிதே நிறைவேறும். 

 *மூலம்* நட்சத்திரகாரர்கள் நாய் இனங்களுக்கு துரோகம் இழைக்காமல் பிஸ்கட் போன்ற உணவு அளிப்பதும்,, மரா மரம் வளர்ப்பதும்,, பருந்துகளுக்கு உணவளிப்பதும்,, பிரதி மூலம் நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட மற்றும் ஸ்ரீராமஜெயம் சொல்ல அனைத்து தோஷங்களும் விலகப் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம். 

 *பூராடம்* நட்சத்திரக்காரர்கள் குரங்குகளுக்கு பழங்கள் தருவதும், வஞ்சி மர தலங்களுக்கு செல்வதும், கௌதாரி பறவையை பார்த்து வருவதும், வருணபகவான் உள்ள கோவில்களுக்கு சென்று வருவதும், தங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி தாயாரை வழிபட்டு வர சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்

 *உத்திராடம்* நட்சத்திரக்காரர்கள் பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கி வர குழந்தை பாக்கியமும், கீரிப்பிள்ளை படத்தைப்பார்த்து வர நன்மைகளும், பலா மரம் வளர்ப்பதும், வலியான் பறவைகளுக்கு உணவளிப்பதும், ஸ்ரீரங்கத்தில் உள்ள விஸ்வேஸ்வரர் வணங்குவதும், பிள்ளையார்பட்டி பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், உட்பட அனைத்து விநாயகர் கோவில்கள் சென்று வணங்குவதும், யானைகளுக்கு வாழைப்பழம் வழங்குவதும் சகல நன்மைகளும் தரும், 

 *திருவோணம்* நட்சத்திரக்காரர்கள் குரங்குகளுக்கு வாழைப்பழம் வழங்கும், வீட்டில் எருக்கு விநாயகர் வைப்பதும், நாரைகளுக்கு உணவளிப்பதும், செவ்வாய் பகவானை வணங்குவதும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மற்றும் திருமலை சீனிவாச பெருமாள் உருவம் கொண்ட ஸ்ரீ மகாவிஷ்ணு வணங்குவதும், சிராவண மற்றும் ஏகாதசி விரதம் இருப்பது தங்களுக்கு அனைத்து நன்மைகளையும் பெற்று தரும், 

 *அவிட்டம்* நட்சத்திரக்காரர்கள் அத்ரவன், அணிலன், அனலன், ஆபன், சோமன், துருவன், பிரத்யூசன், பிரபாசன் ஆகிய அஷ்டவசுக்கள் வணங்குவதும், சிங்கம் உருவம் கொண்ட படங்களை பார்ப்பது, வன்னிமர தலங்கள் சென்று வணங்குவதும், பொன்வண்டு பார்ப்பதும், அனந்த கோலத்தில் இருக்கும் பெருமாளை வணங்குவதும், சப்த கன்னியர்களை வணங்குவதும் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும், 

 *சதயம்* நட்சத்திரக்காரர்கள் காக்கைக்கு அன்னமிட்டு முன்னோர்களை வழிபடுவதும், குதிரைகளுக்கு கொள்ளு தருவதும், கடம்ப மரம் தலவிருட்சமாகக் கொண்ட குளித்தலை கடம்பவனேஸ்வரர் வணங்குவதும், திருப்பைஞ்சீலி சென்று யமதர்மராஜாவை வணங்குவதும், எருமை மாட்டிற்கு அவ்வப்போது அகத்திக்கீரை தருவதும், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வதும் தங்கள் வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும். 

 *பூரட்டாதி* நட்சத்திரகாரர்கள் வியாழக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும், சிங்க வாகனத்தில் இருக்கும் காளி தெய்வத்தை வணங்குவது, உள்ளான் பறவைகளுக்கு உணவளிப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதிக்கு அமாவாசை பவுர்ணமி நாட்களில் சென்றுவர தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழலாம். 

 *உத்திரட்டாதி* நட்சத்திரக்காரர்கள் பசுபதீசுவரர் மற்றும் பசுக்களை வணங்குவதும், வேப்ப மரம் வளர்த்து வருவதும், கோட்டான் பறவைகளுக்கு உணவளிப்பதும், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கோ பூஜை செய்வதும், பசுக்கள் வழிபட்ட சிவாலயங்கள் சென்று வழிபடுவதும், காமதேனு கோவில்களுக்கு செல்வதும் தங்களுக்கு ஏற்படும் அனைத்து இடர்களையும் நீக்கி வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். 

 *ரேவதி* நட்சத்திரக்காரர்கள் யானைக்கு வாழைப்பழம் கரும்பு வழங்குவதும், சிவபெருமானுக்கு இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றுவதும், தாங்கள் பிறந்த தமிழ் மாதம் ஜென்ம நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தாயாரையும் வழிபட தங்கள் வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

நன்றி 🙏💐
வாழ்கவளமுடன்
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

Friday, 21 February 2025

சப்த கன்னியர்

*_சப்த கன்னியர் மூல மந்திரம்_*
         

 சண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் ஆதிபராசக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள்.
ப்ராம்மி, 
மகேஸ்வரி, 
கவுமாரி, 
வைஷ்ணவி, 
வராஹி, 
இந்திராணி, 
சாமுண்டி. 
ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
          1.ப்ராம்மி :- அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். 

தியான சுலோகம் :-  
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

காயத்ரி மந்திரம் :-  
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

 2.மகேஸ்வரி :-  
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.  
கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். 
அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள். இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது..

தியான சுலோகம் :-  
சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

காயத்ரி மந்திரம் :-  
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
              
3.கௌமாரி :-  
கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.
குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

 தியான சுலோகம் :-  
அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

காயத்ரி மந்திரம் :-  
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
  
4.வைஷ்ணவி :-  
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி..    

தியான சுலோகம் :-  
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

காயத்ரி மந்திரம் :-  
ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்
             
 5. வாராஹி :-  
பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாகவும் பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். 
            எதையும் அடக்க வல்லவள். 
            சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். 
            மிருகபலமும்,தேவகுணமும் கொண்டவள்.  
இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். 
லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

 வராகமூர்த்தியின் சக்தி. 
கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். 

தியான சுலோகம் :-  
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

காயத்ரி மந்திரம் :-  
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
              
 6.இந்திராணி :- இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

தியான சுலோகம் :-  
அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

காயத்ரி மந்திரம் :-  
ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.
 
7.சாமுண்டி :- ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! 
சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!
இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். 

தியான சுலோகம் :-  
சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

காயத்ரி மந்திரம் :-  
ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்.
 சப்த கன்னிமார்களின் மந்திரத்தை கூறி வழிபடுவது மிகவும் சிறந்த நன்மைகளை ஏற்படுத்தும்.


🌷🌷