வயிற்றில் சிலருக்கு குடல் புண்கள் அதிகமாக இருக்கும். இதனால், அவர்களால் முழுமையாக சாப்பிட முடியாது. ஒரே வயிற்று வலி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதுபோன்ற, குடலில் ஏற்படக்கூடிய புண்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாகும்.
புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த ஒரு காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை பயன்படுத்துகின்றனர்.
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன்படுத்த வேண்டும். இது குடல் வலிக்கு நல்லதாகும்.
* விந்துவை கெட்டிபடுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய். காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.
* அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும் என்றும் கூறப்படுகின்றது.
* குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.
* மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.
* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* பெண்களுக்கு வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.
9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.
No comments:
Post a Comment