Tuesday, 27 August 2024

நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்

*உலகப் புகழ் பெற்ற மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலியின் மகள் தன் தந்தையை பார்ப்பதற்கு வீட்டிற்கு சென்றபோது, மகளின் ஆடை சிறிது கவர்ச்சியாக இருந்துள்ளது.*

*அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் ஹனா வெளியிட்டுள்ளார்.*

*நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.*

 *வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.*

*நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்ட பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.*

*எங்களை அருகில் அமர்த்திக் கொண்டு,என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து கூறினார்.*

*"ஹனா! "இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது."*

*வைரங்களை எங்கு எடுப்பாய்?*

*பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.*

*முத்துக்களை எங்கு எடுப்பாய்?*

*கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.*

*தங்கத்தை எங்கு எடுப்பாய்?*

 *சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளின் உள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றவர்...*

*என்னை உற்று நோக்கியவராக,*

*"உன்னுடைய உடல் புனிதமானது.வைரங்கள்,முத்துக்களை விட நீ புனிதமானவள்.உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்."என்றார்.*

*எனவே,பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்...*

*பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்த செயல்...*

*அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்...*

*பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.*

*பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய் தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.*

*நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...!*

No comments:

Post a Comment