*அதற்காக தன் மகளுக்கு எப்படி அறிவுரை கூறியுள்ளார் என்பதை அவரின் மகள் ஹனா வெளியிட்டுள்ளார்.*
*நானும், எனது தங்கை லைலாவும் தந்தையின் அறைக்குச் சென்றோம்.*
*வழக்கம்போல், தந்தை கதவிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எங்களை பயமுறுத்துவது போல் நின்றார்.*
*நாங்கள் உள்ளே சென்றவுடன், எங்களை ஆரத் தழுவி, முத்தமிட்ட பின்பு, அவர் எங்களை உற்றுப் பார்த்தார்.*
*எங்களை அருகில் அமர்த்திக் கொண்டு,என் கண்களை நோக்கி நேராகப் பார்த்து கூறினார்.*
*"ஹனா! "இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது."*
*வைரங்களை எங்கு எடுப்பாய்?*
*பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.*
*முத்துக்களை எங்கு எடுப்பாய்?*
*கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் தான் முத்துக்கள் உள்ளன.*
*தங்கத்தை எங்கு எடுப்பாய்?*
*சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளின் உள்ளே மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றவர்...*
*என்னை உற்று நோக்கியவராக,*
*"உன்னுடைய உடல் புனிதமானது.வைரங்கள்,முத்துக்களை விட நீ புனிதமானவள்.உன் உடலை முறையாக நீ மறைத்துக்கொள்ள வேண்டும்."என்றார்.*
*எனவே,பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்...*
*பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்த செயல்...*
*அதைவிடுத்து பொக்கிஷம் உள்ள வீட்டை திறந்து போட்டால்...*
*பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.*
*பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய் தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.*
*நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...!*
No comments:
Post a Comment