Monday, 29 May 2017

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே நாளில் இல்லாமல் போக்க சிறந்த தீர்வு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே நாளில் இல்லாமல் போக்க சிறந்த தீர்வு

பெண்கள் தங்களது முகத்தை பளிச்சென்று வைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்வர்.

பொதுவாக பெண்கள் தங்களது முகத்தை பளிச்சென்று வைக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் கொள்வர். ஆனால் முகத்தில் கரும்புள்ளிகளும், கருந்திட்டுகளும் வந்துவிட்டால் சோகத்தில் ஆழ்ந்துவிடுவர். சில பெண்கள் தங்களது நகங்களால் கரும்புள்ளிகளை கிள்ளிவிடுவர். ஆனால் இவ்வாறு செய்வது தவறு. ஏனெனில் அது கரும்புள்ளிகளை இன்னும் அதிகரிக்கவே வழிவகுக்கும். எனவே இப்பிரச்சனையை கையாள சிறந்தது தக்காளி பேஷியல்.

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன்,
தக்காளி விழுது – அரை டீஸ்பூன்
இந்த இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். முகத்திலுள்ள செல்கள் இறந்து பொலிவிழந்து காணப்படும் முகத்திற்கு இந்த பேஷியலை போட்டால் முகம் கண்ணாடியை போல் பளிச்சென இருக்கும்.
ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். நன்றாக காய்ந்த பிறகு நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால், முகம் சூரியனை போல் பிரகாசிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Friday, 26 May 2017

நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது

உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.

உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே… தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள்  அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.

சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ”சிக்கன் மட்டுமல்ல… இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்

ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்

வெயில்

மனிதர்கள் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இது காலங்காலமாக உள்ளது தான். வெயிலில் போனால் கறுத்துப் போய் விடுவாய் என்று கூறி வெயிலில் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. விவசாயிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும் வெயிலில் தான் இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இவர்களைத் தவிர மற்ற எல்லாருமே வெயிலை விட்டு ஒதுங்கியே வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் சுமார் 10 கோடி மக்கள் உலகம் முழுவதும் வைட்டமின் டி சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பூமியில் உள்ள அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூலகாரணமே சூரியன் தான். சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. வெயில் அதிகமாக இருக்கிறது, வெயில் குறைவாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்வோம். சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பல விதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவைகளின் வீரியத்திற்கேற்ப அவைகளின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.

அதிக வெயிலை, வெயிலின் கடுமையைச் சுட்டெரிக்கும் சூரியன் என்று தான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் 1). எக்ஸ்ரே கதிர்கள், 2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள், 3). இன்பிராரெட் கதிர்கள் இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. 4.). நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும் சூரிய ஒளிக்கதிர் தான்.

ஆக சூரிய கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்பு சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும். இதைத்தான் நாம் சன் பர்ன் அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதேபோல மனிதர்களின் தோலிலுள்ள பிக் மென்ட்சை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றி விடும். நாம் ஏற்கனவே பார்த்தச்படி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதே கதிர்கள்தான் உடலில் வைட்டமின் டி உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கிறது. பத்து சதவீதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவீதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அதை விட்டு விடுங்கள். அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை.

ஆனால்..இந்த சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் பி கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.

உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு வைட்டமின் டி' அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது. வைட்டமின் டி' வேண்டுமென்பதற்காக சட்டை-பேண்ட் எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டு வெயிலில் படுத்து புரள முடியாது. உடம்பில் துணியில்லாமல் வெயிலில் நின்றால் சுமார் 3 ஆயிரத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் யூனிட் வரை வைட்டமின் டி` நமது உடலுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எந்தப் பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது

சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை "சூரிய ஹார்மோன்" என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தைய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின்

Jeyaseelan M IT COORDINATOR:
ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.

கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள்.

ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.

ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கேன் எடுத்தால் போதும். இதய நரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம்.

மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..

டி3 நமக்கு முழுமையாக கிடைக்க ஆன்ட்ராய்டில் "டி மைன்டர்" எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பது  தெரியும். அதைப் பார்த்து உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்: தலைக்கு தொப்பி அணியுங்கள். நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம். நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்

எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும். தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்....

அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எந்தப் பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்

என்ன சூரிய குளியல் நடத்த தயாரா?

கை மருத்துவத்திலேயே


குழந்தைகளுக்கான நோய்களில் பெரும்பாலானவை கை மருத்துவத்திலேயே குணப்படுத்தப் படுகின்றன. குழந்தை மருத்துவத்தில் தாய்ப்பால் மிகவும் சிறப்பிற்கு உரியதாகும். குழந்தை பிறந்து ஓராண்டிற்குத் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும் என்பது மருத்துவ உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். குழந்தைகளுக்கான மருந்துகளைத் தாய்ப்பால், தேனோடு கலந்து கொடுக்கும் வழக்கத்தை நாட்டுப்புறங்களில் காணலாம்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் குறைபாடுகள் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், மந்தாரம் (சீரணக் கோளாறு) போன்றவையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைப் போக்குவதற்குத் தேங்காய் எண்ணெயில் சூடத்தைப்(கற்பூரம்) போட்டுக் காய்ச்சிக் காலில் தேய்ப்பது, மஞ்சளையும் வெள்ளைப் பூண்டையும் சேர்த்துத் தட்டிச் சாறெடுத்து, அதனைச் சூடு செய்து நெற்றியில் தேய்ப்பது போன்ற மருத்துவ முறைகள் கையாளப் படுகின்றன.

குழந்தை தலைகுப்புற விழுந்தாலோ, குழந்தையைத் தலைகீழாகத் தூக்கினாலோ குடல் இடம் மாறிவிடும். இதனைக் குடல் ஏற்றம் என்பர். இதனால் குழந்தைக்கு வயிற்று உளைச்சலும் பேதியும் ஏற்படும். தொடர்ந்து அழுது கொண்டும் இருக்கும். இந்நிலையில் குடல் தட்டுதல் என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். அதாவது குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்து வயிற்றுப் பகுதியைத் தட்டி விடுவர். அவ்வாறு செய்தவுடன் குடல் சரியாகிவிடும். அழுகையும் நின்றுவிடும்.

மேலும்குழந்தைகளுக்குஉதவும்சிலஇயற்கைமருந்துகளைஅறிந்துகொள்வோமா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும். குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

வெயில்

மனிதர்கள் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இது காலங்காலமாக உள்ளது தான். வெயிலில் போனால் கறுத்துப் போய் விடுவாய் என்று கூறி வெயிலில் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. விவசாயிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும் வெயிலில் தான் இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இவர்களைத் தவிர மற்ற எல்லாருமே வெயிலை விட்டு ஒதுங்கியே வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் சுமார் 10 கோடி மக்கள் உலகம் முழுவதும் வைட்டமின் டி சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

பூமியில் உள்ள அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூலகாரணமே சூரியன் தான். சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை. வெயில் அதிகமாக இருக்கிறது, வெயில் குறைவாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்வோம். சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பல விதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவைகளின் வீரியத்திற்கேற்ப அவைகளின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.

அதிக வெயிலை, வெயிலின் கடுமையைச் சுட்டெரிக்கும் சூரியன் என்று தான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் 1). எக்ஸ்ரே கதிர்கள், 2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள், 3). இன்பிராரெட் கதிர்கள் இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. 4.). நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும் சூரிய ஒளிக்கதிர் தான்.

ஆக சூரிய கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்பு சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும். இதைத்தான் நாம் சன் பர்ன் அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதேபோல மனிதர்களின் தோலிலுள்ள பிக் மென்ட்சை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றி விடும். நாம் ஏற்கனவே பார்த்தச்படி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் பி' கதிர்கள் தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதே கதிர்கள்தான் உடலில் வைட்டமின் டி உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கிறது. பத்து சதவீதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவீதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அதை விட்டு விடுங்கள். அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை.

ஆனால்..இந்த சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் பி கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.

உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு வைட்டமின் டி' அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது. வைட்டமின் டி' வேண்டுமென்பதற்காக சட்டை-பேண்ட் எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டு வெயிலில் படுத்து புரள முடியாது. உடம்பில் துணியில்லாமல் வெயிலில் நின்றால் சுமார் 3 ஆயிரத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் யூனிட் வரை வைட்டமின் டி` நமது உடலுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வைட்டமின் டி என பொதுவாக சொல்லபட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. இந்த இரண்டையும் ஒப்பிடவே முடியாது. டி2வால் நமக்கு எந்தப் பலனும் கிடையாது. ஆனால் டி3 இருக்கே? அதுமட்டும் ஒரு மருந்தாக கடையில் விற்க்கபட்டால் அதை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசே கிடைக்கும் எனும் அளவுக்கு முக்கிய மருந்து இது

சூரிய ஒளி நம் தோலில் படுகையில் நம் தோல் அதை வைத்து டி3 வைட்டமினை தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் உறைகொழுப்பும் சேர்த்து எடுத்தால் தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3க்கு இச்சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் இதை "சூரிய ஹார்மோன்" என அழைக்கிறார்கள். டி3 ஹார்மோன் தைய்ராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல உடலின்

Jeyaseelan M IT COORDINATOR:
ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஹார்மோன். அது நம் உடலில் சேர உறைகொழுப்பு எல்லாம் அவசியமில்லை.

கொழுப்பில் கரையும் ஹார்மோன் என்பதால் டி3 அளவுகள் அதிகரித்தால் அது சிறுநீரில் கலந்து வெளியே வந்துவிடாது. ஆக ஓவர்டோஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3ல் இப்பிரச்சனையும் இல்லை. நம் உடலுக்கு போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3யை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். டி3 கால்ஷியம் மேலாண்மை மற்றும் க்ளுகோஸ் மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. கால்ஷியம் இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள்.

ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலனில்லை. பாலில் உள்ள கால்ஷியம் முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து ஆத்ரைட்டிஸ், ஒஸ்டிரியோபொசிஸ் வரும்.

ஒருவருக்கு மாரடைப்பு ரிஸ்க் வருகிறதா என்பதை எப்படி அறிவது? கால்ஷியம் ஸ்கேன் எடுத்தால் போதும். இதய நரம்பு சுவர்களில் கால்ஷியம் படிந்தால் அவருக்கு மாரடைப்பு வரும் என அறியலாம்.

மற்றபடி டி3யின் பெருமைகளை முழுக்க விவரிப்பது சாத்தியமே இல்லை..

டி3 நமக்கு முழுமையாக கிடைக்க ஆன்ட்ராய்டில் "டி மைன்டர்" எனும் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் ஊரில் எந்தெந்த சமயம் சூரிய ஒளியில் டி3 கிடைக்கும் என்பது  தெரியும். அதைப் பார்த்து உச்சிவெயிலில் 10 நிமிடம் நிற்பதே போதுமானது. அப்படி நிற்கையில்: தலைக்கு தொப்பி அணியுங்கள். நிழலில் அமர்ந்து கை, காலை மட்டுமாவது காட்டலாம். நேரடி தோலில் சூரிய வெளிச்சம் படவேண்டும். கண்ணாடிக்கு பின்னிருந்து காட்டுவது கான்சரை தான் வரவழைக்கும்

எத்தனை தோல் எக்ஸ்போஸ் ஆகிறதோ அந்த அளவு டி3 உற்பத்தி கனஜோராக நடக்கும். தொப்பி, அரைகை சட்டை, ஆப்டிராயர் அணிந்திருந்தால் 25 நிமிடம் வெயிலில் நின்றால் போதும். சட்டை இல்லையெனில் 15 நிமிடம். சும்மா ஒரே நிமிடம் நின்றால் கடையில் விற்கும் டி3 மாத்திரையில் இருக்கும் அளவு டி3 கிடைத்துவிடும்....

அதிகாலை சூரிய ஒளி, மாலை சூரிய ஒளி இதமாக இருந்தாலும் அதனால் எந்தப் பலனும் கிடையாது. அவற்றை தவிர்க்கவும்

என்ன சூரிய குளியல் நடத்த தயாரா?