Thursday, 15 March 2018

உடல் நலக் கோளாறுகளும் அதற்கான எளிய தீர்வுகளும்!

உடல் நலக் கோளாறுகளும் அதற்கான எளிய தீர்வுகளும்!

* இருமல் சளி குணமாக,  சித்தரத்தை, பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து,  மூன்று வேளைக்கு தொடர்ந்து, மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், வரட்டு  இருமல் சளி குணமாகும்.
* இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி  சாப்பிட்டு வர, உடல் சக்தி பெறும்.
* நாயுருவி இலையுடன் சிறிது மஞ்சள்   சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர, விரைவில் ஆறிவிடும்.
* வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு நன்கு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு படிப்படியாக  நீங்கும்.
* வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெயில்  போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில்  பத்திரப்படுத்தவும். இதை காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர, காதில்  சீழ்வடிதல் நின்று விடும்.
*  மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய்  மூன்றையும் நன்றாக குழைத்து, கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால்,  கட்டிகள்  சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
* வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால், தலையில் உள்ள  பேன் நீங்கும்.
* ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு  வந்தால் மேனி பளபளப்பு பெறும்.
* தூதுவளை பொடியில், மிளகு பொடி கலந்து தேனில்  (அ) பாலில் சாப்பிட்டால், தும்மல் வராது.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின்  கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை  நாளடைவில் மறைந்து விடும்.
* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக்  கொண்டிருந்தால், வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு  விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல்  நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு  கரைந்து விடும்.
* அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும்  சமமாகப் பொடி செய்து, 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில்   கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு  வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை  2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment