Saturday, 5 November 2016

பூண்டு

**

மூளைக் காய்ச்சல் நோயைக்கூட குணப்படுத்தவல்லது

மூளைக்காய்ச்சல் உள்ள குழந்தைகளை பூண்டை நசுக்கி முகர்ந்துவரச் செய்ய
விரைவில் மூளைக் காய்ச்சல் குணமடையும்

இன்னும் ஏராளம் படியுங்கள்

பூண்டின் பிரமாதமான மருத்துவக் குணங்கள்

நம் சமையலறை அலமா‌ரி‌யி‌ல் உள்ள ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு எப்போதும மு‌ன்னு‌ரிமை உண்டு.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.

பூண்டை உணவில் சேர்த்தால் நல்லது. ஆனால் அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன. அதனால், அப்படியே கடித்து விழுங்குவது மிகவும் நல்லது.

தொண்டை கரகரப்பாக இருந்தால் நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால் உடனே சரியாகும். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால் சர்க்கரை அளவை சீராக்குகிறது. இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு. மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும் அலர்ஜி நீங்கிவிடும். பல் வலி வந்தால் ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டால் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் என எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால் மூச்சு விட்டாலும் அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது

வெள்ளைப் பூண்டு 30 மருத்துவ குணமும் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பக்குவமுறையும்

நாம் தினசரி சமையலில் பூண்டை அளவாக பயன்படுத்தினாலே போதும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது    என்பது  எவ்வளவு பேருக்குத் தெரியும்

1)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகறிக்கிறது,

2)இரத்தத்தில் வெள்ளணுத் திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது,

3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது

4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது,

5)மாரடைப்பு மற்றும் இதய  நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது,

6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),

7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்

9)சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,

10)வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,

11)அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

12)புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலைபோக்குகிறது,

13)வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

14)நன்கு பசியைத் தூண்டும்.

15)குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது

16)மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

17)வியர்வையை பெருக்கி கழிவுகளி வெளியேற்றுகிறது,

18)பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,

19)ஒற்றைத்தலைவலியை போக்குகிறது,

20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

21)கருப்பையை வலுப்படுத்தும்.

22)சோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது,

23)மூளையை பலம்பெறச் செய்கிறது

24)சளித்தொல்லையில் இருந்து பாதுகாக்கிறது,

25)தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது,

26)தாய்ப்பாலை விருத்தி செய்ய செய்கிறது,

27)கைகால் மூட்டுவலி மற்றும்  முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது,

28)தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.

29)(சக்கரை) நீரழிவைக் கட்டுப்படுத்த  உதவுகிறது,

30)தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

பூண்டை உபயோகப்படுத்தும் முறை :-
--------------------------------------------------------
பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

நாட்டுப்பூண்டையே அதிகமாக பயன்படுதுங்கள்.சைனா பூண்டை விட
   நாட்டுப்பூண்டிலேயே அதிக சத்து உள்ளது

பூண்டை மறைமுகமான விதத்தில் பூண்டு ஊறுகாய், பூண்டு மாத்திரை போன்ற  வடிவில் சாப்பிடுவதை விட நேரடியாக சாப்பிடுவதே நல்லது

பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

பூண்டின் காரம் போக சிறிது மோர் அருந்தலாம் இல்லை என்றாலும் ஒன்றும்  பாதிப்பிலை

அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல ரொம்பவும்   அதிகமாக சேர்த்துக் கொல்லாதீர்கள்

தினசரி ஒரு நபருக்கு ஆறு பல்லு விதம் கணக்கிட்டு சேர்த்துக்  கொள்ளுங்கள் 

நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது, இரத்தத்தில் உள்ள வெள்ளைஅணுக்களின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது:

பூண்டில் உள்ள சல்பர் கிருமிகளை அளிக்க வல்லது. இது இரண்டு வகையானஆண்டி பயாடிக்சைஸ உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 வகையான பாக்டீரியாக்களை அழித்து .இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது

உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது, இரத்தத்தை தூய்மைபடுத்துகிறது மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது:

இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.

உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ),உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது, இரத்தகுழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும்:-

பூண்டில் உள்ள சல்பர்,மற்றும்  குளோரின்  நமது மூளையில் உள்ள பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது கெட்ட கொழுப்பை ( LDL)குறைத்து நல்ல கொழுப்பை(HDL) அதிகரிக்கிறது

சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்கிறது,
வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது,அஜீரணக்கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது,

புளிப்பு சேருவதால் உண்டாகும் வயிற்று எரிச்சலை போக்குகிறது,வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்,

குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும். வியர்வையை பெருக்கி கழிவுகளை வெளியேற்றுகிறது:-

நமது சுவையான உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகமாக
இடம்்பிடிக்கின்றன. இதனால் மலச்சிக்கல் உண்டாகி வாய்வு உண்டாகி
அஜீரணக் கோளாறு புளிப்பு வயிற்று பொறுமல் வயிற்று எரிச்சல் போன்றவை உண்டாகி பாடாய் படுத்தும்

தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் இவை அனைத்தையும் தடுத்து குடலில் உள்ள புழுக்களை அகற்றிபசியைத் தூண்டும்

பித்தம் ஏற்படாமல் தடுக்கிறது,ஒற்றைத் தலைவலியை போக்குகிறது:-

பித்தம் மற்றும் ஒற்றைத்தலைவலிக்கு பூண்டே கைகண்ட மருந்து நம் முன்னோர்கள் சொல்லிவைத்து இருகின்றனர்

20)மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது

பூண்டில் உள்ள சல்பர் மற்றும் ஆண்டி  ஆக்ஸ்டன்ஸ் கருப்பையை வலுவாகி மாதவிடாய்க் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது

மூளையை பலம்பெறச் செய்கிறதுசோர்வை போக்கி உடற் சக்தியை அதிகப்படுத்துகிறது:-
பூண்டில் உள்ள விட்டமின் B மற்றும்  K உடலுக்கு தேவையான சக்தியை சீராக செம்மை படுத்தி பலம் பெற செய்கிறது               🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 *தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்*       
*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!*                             *வாழ்க வளமுடன்*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment