Tuesday, 8 November 2016

சிவனுக்கு_அபிஷேகம்_செய்வதால்

#சிவனுக்கு_அபிஷேகம்_செய்வதால் #ஏற்படும்_பலன்கள்.

சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். சிவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

👉 சிவனை தூய நல்லெண்ணையில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகம் செய்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

👉 சுத்தமான பசுவின் கறந்த பாலில் அபிஷேகம் செய்தால் தீர்க்க ஆயுள் கிடைக்கும்.

👉 சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் குயிலினும் இனிய குரல் கிடைக்கும்.

👉 சர்க்கரையினால் அபிஷேகம் செய்தால் மனநிறைவு உண்டாகும்.

👉 இளநீர் அபிஷேகம் செய்தால் பேரானந்தம் கிட்டும்.

👉 பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

👉 தயிர் அபிஷேகம் செய்தால் சம்பத்து கிடைக்கும்.

👉 கரும்புச்சாறு அபிஷேகம் செய்தால் உடல் வலிமை பெறும்.

👉 மஞ்சள் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

👉 ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment