Friday, 17 March 2017

இரு மருத்துவ ஆய்வுகள்

இரு மருத்துவ ஆய்வுகள்

பிலிப்பைன்ஸின் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தேங்காய் எண்ணெய், நியுமோனியா உள்ள குழந்தைகளுக்கு துரிதமாக சுவாசத்தை சீராக்கியது.

40 அதி-பருமனான பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டதால் பக்க விளைளவுகளின்றி, உடல் எடை குறைந்திருக்கின்றது.


சரி, தீர்ப்பு என்ன? தேங்காய் எண்ணெய் நன்மையா தீமையா

ஆயுர்வேதத்தின் படி இயற்கையாக தேங்காய் எண்ணெய் உள்ளுக்கு எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். எனவே உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கு மருந்தாக உபயோக மாகின்றது.

நியுமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயனாகின்றது. இது மேற்சொன்ன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

முடி வளர்ச்சி, காயங்களை ஆற்றுதல், எக்சிமா மருந்தாக, இயற்கையான குளுமை குணம் முதலியவற்றுக்கு வெளிப்பூச்சாக நல்ல பலன் தரும் என்று ஆயுர்வேதம் தேங்காய் எண்ணெய்யை புகழ்கின்றது.

ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் உண்டுபண்ணுவதில்லை என்று தெரிவிக்கின்றன. கேரளாவில் எல்லா வித உணவு தயாரிப்புகளிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. தேங்காய் எண்ணெய் தான் அதிக உடல் பருமனுக்கு காரணம் என்றால் ஏன் கேரள மக்கள் அனைவரும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இல்லை?

இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள் அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.

முடி தைலங்களுக்கு தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல முக்கிய மூலப்பொருள் வேறேதும் இல்லை.

தேங்காய் எண்ணெய் சர்மத்திற்கு ஈரப்பசை ஊட்டவும், மிருதுவாக்கவும் பயன்படுகின்றது.

ஆரோக்கியமான மனிதனின் உணவில் அளவாக தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அது மிகவும் நல்லது.

அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெய்யின் பலன்களைப் பெறலாம்.

No comments:

Post a Comment