#குழந்தைகளை #சனியனே என்று திட்டக் கூடாது...ஏன்?.
வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது.
நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கும்.
நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும்.
நாம் குழந்தைகளை சனியனே என திட்டும்போது அந்த தேவதையும் ஆகட்டும் என ஆசீர்வதத்துவிடும். இதனால்தான் குழந்தைகளை சனியனே என்று திட்டக்கூடாது.
ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக் கூடாது.
நிறைய இருந்தது மறுபடியும் வாங்க வேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம்.
வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும்.
வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும்.
எனவே பேசும் போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்.
♥♥♥
No comments:
Post a Comment