Monday, 24 October 2016

டென்ஷன்

தற்கால வாழ்வில் அதிக பரபரப்பு. அதன் காரணமாக படபடப்பு (டென்ஷன்) உயர் ரத்த அழுத்தம். முடிவில் இதயத்தில் பிரச்சனை. அதிக அளவில் இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகளும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதய நோயை எளிதில் கட்டுப்படுத்தும் எளிய மருந்து 'செம்பருத்தி'. இந்தப் பூவை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்திவர இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கிடைக்கும்போது சேகரித்து உலர்த்தியும் உபயோகிக்கலாம்.

இதன் இலையை அரைத்து தலைக்குத் தேய்த்துவர மூளை குளிர்ச்சி அடையும். முடி செழித்து வளரும். பூக்களைத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வரக் கூடுதல் நன்மை கிடைக்கும்.

கைப்பிடி அளவு ஊறவைத்தப் புழுங்கல் அரிசி, மேற்படி இலை பிடி, அளவு, உப்பு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடல் குடல் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் தீரும்

No comments:

Post a Comment