Tuesday, 4 April 2017

சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தில்

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தில் விட்டமின் B, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இது போன்ற தாது உப்புக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

எனவே தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும். அதுவே இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். மேலும் கொய்யாவின் தோலில் அதிக சத்துகள் உள்ளதால், தோல் நீக்காமல் சாப்பிடுவது நல்லது.

கொய்யாப்பழம் முகத்திற்கு பொலிவை தருவதுடன், தோல் வறட்சி மற்றும் தோல் சுருக்கத்தை தடுத்து, முகத்திற்கு என்றும் இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால், இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே இது நீரிழிவு நோய் மற்றும் மூலநோய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?
கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?
கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யா பழத்தில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யாமரத்தின் இலைகள், திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து, காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு மருந்தாக உதவுகின்றன.


கொய்யாமரத்தின் பட்டை, பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர் பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால் 

பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான, மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment