* கரிசலாங்கண்ணிக்கீரை*.
இது கையாந்தகரை என்று தமிழ் நாட்டிலும், பிருங்கராஜ் என்று வட நாட்டிலும் அழக்கப்படுகிறது.
கரிசலாங்கண்ணிச் செடியில் பூக்கும் மலர்களின்
நிறத்தைக் கொண்டு சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள்
என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால்
வெள்ளை நிற மலர்கள் பூக்கும் கரிசலாங்கண்ணிக்
கீரையே அதிகம் கிடைக்கட்கூடியதாக இருக்கின்றது.
மஞ்சள் நிற புவுடைய மஞ்சள் கரிசலாங்கண்ணிக்
கீரையை உணவாகச் சமைத்து உண்ண உடல் பொன்னி-
றமடையும் அதிலுள்ள இயற்கைச் சத்துக்கள் உடலுக்கு
மினுமினுப்பைக் கொடுத்து மிளிரச் செய்யும். அதனால்
இதை பொற்றிலைக்கையான் என்றும் அழைப்பதுண்டு.
பொதுவாக கரிசலாங்கண்ணிக் கீரைக்கு ஈரலைப்
பாதுகாக்கும் குணம் உண்டு.
பல்வேறு காரணங்களால் கல்லீரல் சீர்கெட்டு வீங்கி
மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகின்றது. அதனால்
கண்கள் மஞ்சள் நிறமடையும். வெளியாகும் சிறுநீர்
மஞ்சள் நிரத்தில் காணப்படும். முற்றிய நிலையில்
நகங்களும், உடலும் கூட மஞ்சள் நிறமாகும். மலமும்
வியர்வையும் மஞ்சள் நிறமாக வெளியேறும். அவ்வாறு
முற்றிய நிலையில் உள்ள மஞ்சள் காமாலை நோய்க்கு
கரிசலாங்கண்ணிக்கீரையை சிறிதளவு நீர்விட்டு
அரைத்து, பசுமோரில் கலக்கி காலை, மாலை என நோயின் தன்மைக்கு ஏற்ப ஒரு வாரம் அல்லது 15
நாட்கள் அல்லது ஒரு மாதம் என அருந்திவர மஞ்சள்
காமாலை நோய் முற்றிலும் குணமாகும்.
பொதுவாக பித்தநீர் அதிகம் சுரந்தால் வாய்க்கசப்பு
இருக்கும். செரிமான சக்தி குறையும். சிலருக்கு
வாந்தியும் கூட ஏற்படும். இது போன்ற கோளாறுகள்
உள்ளவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரையை உப்பு, பூண்டு,
புளி, சிறிதளவு மிளகாய், தேங்கய் சேர்த்து துவையலாக
அரைத்து உணவில் சேர்த்து வந்தால் பித்தநீர் சுரப்பு
சீராகி, வாய்க்கசப்பு நீங்கும். கிராமங்களில் கரிசலாங்கண்ணிக் கீரையை பச்சையாக மென்று தின்னும் பழக்கம் உள்ளது.
இக்கீரையை நெய்விட்டு வதக்கி வெங்காயம், பூண்டு,
மிளகாய், சீரக, சேர்த்து வேக வைத்து அத்துடன்
தேங்காய் துருவல், பருப்பு சேர்த்து கடைந்து உணவில் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வர பார்வை நரம்புகளுக்கு வலுவைக் கொடுக்கும். அதனால் விழிகள் பிகாசமடையும்.
Sunday, 21 August 2016
கரிசலாங்கண்ணிக்கீரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment